
கவலைகளைப் பெருக்கி
மெளனக் கூட்டலில்
மூழ்கிக் கிடக்கிறாய் ,
கழித்துவிட்டு எழு என்கிறேன்,
நீ வகுத்துக் கொண்டிருந்தால்
வாழ்க்கையில் கவலை
மிச்சம் இருக்கதான் செய்யும் !
சமன் பாடுகளில் எப்போதும்
தொலைந்துப் போகாதே !
விகிதங்களின் பகுதியில்
கவலைகளுக்கும்
நிச்சயம் பங்குண்டு !
கணக்குப் போட்டு வாழ்வதல்ல
வாழ்க்கை ,
விட்டுக் கொடுக்கும் மாண்பை
கடனாக வாங்கிக் கொள்,
விடையில் மகிழ்ச்சி
எப்போதும் மிச்சமாய் இருக்கும்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment