
இலக்கணம்
பிழை யென்றார்,
சீர் கெட்டு
போனதென்றார்,
தலைக் கணம்
கூடியதால்
அடிப் பிறழ்ந்து
போனதென்றார்,
எதுகையும்,மோனையும்
இல்லவே
இல்லையென்றார்,
வாய்பாடும்,
தப்பிதம் என்றார்,
அயலான் மொழி
ஊடுருவல்
அதிகம் என்றார்,
குறில்,நெடில்
குழப்பத்தால்
வார்த்தைகள்
சிதைந்ததென்றார்,
மொத்தத்தில்
இந்த "தமிழ்"
கவிதையே
பிழை என்றார்...
ஓடிப் போன
தன் மகள் தமிழை
நினைவில் இருத்தி.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment