
இறந்துக் கிடந்த கவிதைகளை
குப்பைக் கூடையில்
அள்ளித் தட்டுகிறாள் அம்மா ,
'பொழைக்கிற வேலையைப் பார் '
இஃது அப்பா ,
கவிதைகளை
எரித்துவிடச் செல்கிறேன்...
வேறு பெயர்களில் அவை
உயிர் பெறலாம் ,
பசிக்கு விழுந்த உணவு
அப்பா காசென்று சிரிக்கின்றது ,
மரத்துப் போய்
மடங்கிக் கிடக்கிறது
வாங்கிய பட்டம் ,
சிரிப்பதெல்லாம் இப்போது
செயற்கையாகி விட்டது ,
மீண்டும்
வெள்ளைத் தாளைதான்
தேர்ந்தெடுக்கிறேன் ,
கவிதைகள் மட்டும் தான்
என் கூடவே இருக்கின்றது
கவலைகளை வாங்கிக் கொள்ள .
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment