Thursday, 27 July 2017

சூழ் வலி

Image may contain: one or more people and people sitting

இறந்துக் கிடந்த கவிதைகளை 
குப்பைக் கூடையில் 
அள்ளித் தட்டுகிறாள் அம்மா ,

'பொழைக்கிற வேலையைப் பார் '
இஃது அப்பா ,

கவிதைகளை 
எரித்துவிடச் செல்கிறேன்... 
வேறு பெயர்களில் அவை 
உயிர் பெறலாம் ,

பசிக்கு விழுந்த உணவு 
அப்பா காசென்று சிரிக்கின்றது ,

மரத்துப் போய் 
மடங்கிக் கிடக்கிறது 
வாங்கிய பட்டம் , 

சிரிப்பதெல்லாம் இப்போது 
செயற்கையாகி விட்டது , 

மீண்டும் 
வெள்ளைத் தாளைதான் 
தேர்ந்தெடுக்கிறேன் , 

கவிதைகள் மட்டும் தான்
என் கூடவே இருக்கின்றது 
கவலைகளை வாங்கிக் கொள்ள . 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts