Tuesday, 11 July 2017

சிதையும் தேகத்தான்

Image may contain: night

யாரோ ? 
யாருடனோ ? 
யாருக்காகவோ ? 
கேள்விகளில் 
தொக்கித் தொடரும் 
கேள்விகளின் தேகம் ! 

சிந்தனைகளில் 
சிக்கியும் பிடிபடாத 
ஓரு மாயைப் புள்ளி ! 

சித்தாந்தம் 
தெரிந்ததாய்ச் சொல்கிறான் 
சிதையும் தேகத்தான் ! 

ஆசைகளை 
ஆகாயத்தில் பறக்க விட்டு 
அறுந்து வீழ்ந்ததும் 
அழுது தொலைக்கிறான் ! 

சொற்பச் சுகங்களையும் 
நிறைந்த 
துயரங்களையும் தவிர 
வாழ்க்கையின் மிச்ச மென்ன ? 

ஏறுகின்ற ஏணியின் 
காலடியில் 
வாழ்கிறது கரையான் புற்று ! 

வீழ்கின்ற நேரம் 
அவைகளுக்கும் தெரியாது ! 

மரணமொன்றும் 
புதிர் கிடையாது.... 
புழுக்களின் வீடுதான் 
புழுக்களுக்கும் கூட ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts