Thursday, 27 July 2017

பொல்லா வர்க்கம்

காற் சிலம்பை கழற்றியெறிய 
இவளொன்றும் கண்ணகியில்லை, 
தோளிருக்கும் திடம் மட்டும் 
வெட்டறிவாள் கையில் இருக்கும், 
போக்கத்த காவியத்தின் 
பெண்ணாக  நாட்டமில்லை.. 
ஆணுக்கு பெண்ணொன்றும் 
அத்துணை சளைப்பில்லை...
தலை நீட்டும் புல்லிற்கே 
இத்தனை கர்வம் என்றால், 
வேர் தாங்கும் மண்ணிற்கு 
எத்துணை பலமிருக்கும்...
போடா நீ, 
போக்கத்த பொல்லாத வர்க்கமே நீ!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts