
காதலே ! ஓ...காதலே !
நீ காற்றா ? இல்லை மழையா ?
சில்லென்று பூத்த
சிறும் குளிரா ?
சொல் ..சொல் மனமே !
காமம் விரித்த சிறகா ?
காத்திருக்கும் உறவா ?
மாயன் விரித்த வலையா ?
மார்பில் தவழும் மலரா ?
சொல்..சொல் மனமே !
பாடல் செய்யும் தமிழா ?
பார்வைச் செய்யும் குறும்பா ?
வன்மம் செய்யும் மொழியா ?
வலையில் வைத்த இரையா ?
சொல்..சொல் மனமே !
கவிதை மொழியின் அழகா ?
கனவில் வாழும் உயிரா ?
மோகத் திரையின் நிழலா ?
மோச வலையின் சிறையா ?
சொல்..சொல் மனமே !
மூப்பில் மறையும் நிலவா ?
முதுமைத் தவழும் தொடரா ?
இரந்து வாழும் பொருளா ?
இறப்பில் வாழும் பயிரா ?
சொல்..சொல் மனமே !
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment