
மௌனம்
தனிமையில் சுற்றித் திரிகின்றது,
யாரும் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை,
புத்த விகாரங்கள் சிதைந்து கிடக்கின்றன...
போதி மரத்தினில் அனற் கற்று வீசுகின்றது,
பிரச்சனைகள்
மௌனத்தின் முதுகேறிப் பயணிக்கின்றன,
இரத்தச் சுவடுகளில்
கால் பதிக்காமல் எப்படி நடப்பது?
அவலங்களின் ஓல ஓசையில்
மௌனம் இறந்து விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள்,
கடலைத் தேடிப் போன மௌனம்
தோட்டாக்கள் துளைத்த
உதிரச் சப்தத்தில் உறைந்து போனது,
எயினனாய் எல்லோரும் கூவினில்
நா இரைக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்,
அகலிடக் கூறுகளை ஆயுதம் துளைக்க
ஆலைகளின் சப்தம் வானையும் சிதைக்கிறது,
விசித்தலில் நுரைத்த மௌனம்
தனிமையில் சுற்றித் திரிகின்றது,
யாரும் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment