
சிதைவுகளில்
சிக்கி சீரழியும்
மனதின் வலிகளை
யார் உணரக் கூடும் ,
கவலைகள்
கூடு கட்டியிருப்பவனின்
கண்களில்
கண்ணீர் துளிகள் குற்றமில்லை ,
இடறி விட்டவன்
நடந்து போகிறான்...
விழுந்தவன்தான் இனி
எழுந்து நடக்க வேண்டும்
வேற வழி ,
படகோட்டியின்
தோள்களின் வலி
மீனைச் சாப்பிடுபவனுக்கு
எப்படித் தெரியும் ?
ஆறுதல் சொல்வது
எப்போதும் சுலபமானது
சுமைகளை யார்
பகிர்ந்து கொள்வது ?
கண்ணீரை துடைப்பதற்கு
கரங்கள் வேண்டாம்...
கைகளைத் தூக்கி விட்டால்
அதுவே போதும் .
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment