Wednesday, 26 July 2017

குற்றமில்லை

Image may contain: one or more people, cloud and sky

சிதைவுகளில் 
சிக்கி  சீரழியும் 
மனதின் வலிகளை 
யார் உணரக் கூடும் ,

கவலைகள் 
கூடு கட்டியிருப்பவனின் 
கண்களில் 
கண்ணீர் துளிகள் குற்றமில்லை ,

இடறி விட்டவன் 
நடந்து போகிறான்...
விழுந்தவன்தான் இனி 
எழுந்து நடக்க வேண்டும் 
வேற வழி ,

படகோட்டியின் 
தோள்களின் வலி 
மீனைச் சாப்பிடுபவனுக்கு 
எப்படித் தெரியும் ? 

ஆறுதல் சொல்வது 
எப்போதும் சுலபமானது 
சுமைகளை யார் 
பகிர்ந்து கொள்வது ? 

கண்ணீரை துடைப்பதற்கு 
கரங்கள் வேண்டாம்... 
கைகளைத் தூக்கி விட்டால்  
அதுவே போதும் . 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts