
கற்பனையில் சிறகுகள் வரைந்து
வானத்தில் பறக்க விடுகிறேன்...
கவிதைகள் கை தட்டலில் நனைகின்றன !
வானத்தில் வல்லூரின் பிடியில் சிக்கி
உதிரம் சிந்தச் சிதறி விழும் பறவையை
அங்கே யார் கண்டது ?
காதலைப் பற்றி எழுதும் அவ் வேளையில்தான்
மனிதர்களைக் கொறித்துக் கொண்டிருந்தன
இராணுவக் குண்டுகள் !
செய்தி வாசிப்பின் சில நிமிடங்களில்
கடந்து போகிறது ஏதோ ஒரு செய்தியாக !
பாலஸ்தீனத்துப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினால்
எனக்கென்ன கவலை ?
என் வீட்டுப் பறவைகள் பத்திரமாக இருக்கின்றன!
வெட் டரிவாளில் வீழ்ந்து கிடப்பது
என் தங்கையே கிடையாது !
முத்த கவிதைகளை மிச்சம் வைத்திருக்கிறேன்
முடிக்கக் கொஞ்சம் கற்பனைத் தேவை !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment