
காசாளர் அறையில்
கட்டுக் கட்டாய் பணம் ,
கல்விக் கூடம் திறந்தாச்சி ,
பாடசாலை முழுவதும்
மாணவர்கள்,
பாடம் நடத்தத் தெரியாத
ஆசிரியர்கள் ,
நடத்தாத பாடத்தில்
எழுதாத வீட்டுப் பாடத்திற்கு
அம்பது ரூபாய் அபராதம் ,
அடுத்த மாதம்
ஆசிரியருக்கும் ஆசிரியைக்கும்
கல்யாணமாம் ,
கல்விக் கூடம் உபயம் ,
நிர்வாகக் கூட்டம்
பள்ளி வளர்ச்சிக்காக ...
இன்னமும் ,
எத்தனை வகுப்புகளை
எப்படி கூட்டலாம் ,
தாசில்தார் அனுமதி
பள்ளி விரிவாய் வளர்வதற்கு ,
அவர் பிள்ளைக்கும் அங்கே
இடம் கிடைத்தது ,
அரசுப் பள்ளியின் ஆயா
தன் பிள்ளையைக்
கூட்டிப் போக வந்திருக்கிறாள்...
சம்பளத்தை
கான்வென்டில் கட்டியாகி விட்டது ,
ஆளில்லாப் பள்ளிகளை
மூடி விடுங்கள் ,
அரசின் அதிரடி உத்தரவு ...
மந்திரிக்குப் பணம்
கான்வென்டிலிருந்து ,
+2
முடித்து வந்தவனுக்கு
தமிளும் தெரியவில்லை
ஆங்கிலமும் புரியவில்லை ,
ஆங்கிலப் பள்ளியில்
வரிசைக் கட்டி நிற்கின்றது
ஆடம்பரக் கூட்டம் !
சீட்டுக் கிடைக்கத்தான்
கடவுளுக்கு நேர்த்திக் கடன் .
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment