Thursday, 27 July 2017

கவிதையா இது?

Image may contain: one or more people and people standing

இதுதான் 
கவிதையென்று 
சொல்லிவிட்டுப் போகிறான் 
ஒருவன் ,

இதுவாக் கவிதையென்று 
நகைக்கிறான் ஒருவன் , 

யாப்பைத் தேடி 
களைக்கிறான் ஒருவன் ,

பாரதியைத் தேடுகிறான் 
ஒருவன் , 

காதலே 
இல்லையென்கிறான்  
ஒருவன் ,

காசுக்கும் தேறாதென்கிறான் 
ஒருவன் ,

ஒருவன்கள் இராஜ்ஜியத்தில் 
நான் மட்டும் தனியாளாய் 

கவிதையின் தாளாய் 
கசங்கிக் கொண்டு ... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts