
இதுதான்
கவிதையென்று
சொல்லிவிட்டுப் போகிறான்
ஒருவன் ,
இதுவாக் கவிதையென்று
நகைக்கிறான் ஒருவன் ,
யாப்பைத் தேடி
களைக்கிறான் ஒருவன் ,
பாரதியைத் தேடுகிறான்
ஒருவன் ,
காதலே
இல்லையென்கிறான்
ஒருவன் ,
காசுக்கும் தேறாதென்கிறான்
ஒருவன் ,
ஒருவன்கள் இராஜ்ஜியத்தில்
நான் மட்டும் தனியாளாய்
கவிதையின் தாளாய்
கசங்கிக் கொண்டு ...
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment