
வார்த்தைகளின்றி
ஒரு கவிதை
வெள்ளைத் தாளாய்
உட்கார்ந்திருக்கிறது !
எழுதுகோல்
கிறுக்கிப் போட்டத் தாள்கள்
இறந்து போய்க் கிடக்க...
வார்த்தைகளின்றி
ஒரு கவிதை
வெள்ளைத் தாளாய்
உட்கார்ந்திருக்கிறது !
தவறி விழுந்த
மசிக் கூடு
ஓவியம் வரைந்துப் போக...
வார்த்தைகள்
வந்து விழுகிறது
கவிதைகளாக !
நிச்சயமாக அது
உன் கதையோ
என் கதையோ அல்ல !
தவறி விழுந்து
கறைப் படிந்தவர்களின்
கதையாகத் தானிருக்கும்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment