Friday, 28 July 2017

மாய வனம்

Image may contain: tree, plant, outdoor and nature

சிதைந்து போயிருந்தது 
அந்தப் பறவையின் கூடு 
ஒரு வரலாறு 
வாழ்ந்து மறைந்த 
அடையாளங்களோடு , 

இந்த ஒற்றை மரம் 
நிழலுக்காக 
விட்டு வைத்திருக்கலாம் , 
தோப்பின் மற்ற மரங்களைக் 
காணவில்லை , 

புகார் வாங்கிய 
வனத் துறைக்காரன் 
உட்கார்ந்திருந்தது 
அந்தத் தோப்பின் 
மற்றைய மரத்தின் 
ஒற்றை மரமாக இருக்கலாம் ,

வரலாற்றின் படிமங்களாய் 
மிருகங்களின் தோல்கள் 
மணிப் பர்சுகளாகவும் 
உயர் ரக ஷூக்களாகவும் , 

நாளை 
நகரமாகவும் ஒப்பனைப் படலாம் 
இந்த வனம் , 

தண்ணீரைத் தேடி 
மனித வேர்கள் திரியலாம் , 

மரங்களை நடுங்கள் 
என்ற கோஷங்கள் விரியலாம் ,

ஆனாலும் 
மேகங்கள் வனத்தைத் தேடி 
அலையும் அவ்வேளையில்... 

பறவைகள் எங்காவது 
எச்சத்தை விதைத்து 
சொச்சமாய் ஒரு வனம் 
விளைந்திருக்கும் ,

அந்த மாய வனம் காக்க 
மிருகங்கள் 
வேலிப் போட்டிருக்கக் கூடும் , 

பார்த்துப் போங்கள்... 
அங்குப் போகும் மனிதர்கள் 
காணாமல் போவார்கள்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts