.எச்சில் தீட்டு
‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே
சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே
மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே
தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே
நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே
அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே
எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’
.
கவிதாயினி . ஆவுடையக்காள்
* பாரதியாருக்கு முன்னோடியான இவரது கவிதைகள் மறைக்கப் பட்ட வரலாறாக இருக்கிறது, இவரது கவிதைகளின் தாக்கம் பாரதியின் பாடல்களில் காணலாம். தீண்டாமையை துணிந்து எதிர்த்த பெண். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவரது கவிதைகளை பின்னர் தொகுத்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாவின் அக்காள் கோமதி ராஜாங்கம் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment