மரண தண்டனைக்கு
மரண தண்டனை விதிக்க
யார் வருவார்?
கருணையே இல்லாத
பதிலுக்காகவே
காத்திருக்கின்றன
கருணை மனுக்கள்,
நீதி தேவதையின்
கண்களை கட்டும் போது
காதுகளையும்
சேர்த்து கட்டிவிட்டார்கள்,
சாட்சி சொல்லவந்தவனை
சாகடிக்கும் பெருமை,
அவர்களுக்கு மட்டும்தானே
நயமாய்த் தெரியும்
ஒப்புதலில்லாத ஒப்புதலை
நுட்பமாய் எழுத
கற்றா தர வேண்டும்,
மரணித்த உயிருக்காக
அழும் நல்லவர்களே...
நாளை
மரணிக்கும் உயிருக்காக
எத்தனை பேர்
அழப் போகிறீர்கள்?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment