பள்ளிப் பருவ வயதில்
துள்ளித் திரிந்தவள் !
பருவம் போர்த்த நொடியில்
பதுக்கப் பட்டவள் !
மனைவி யென்றப் பெயரில்
மனையைத் துறந்தவள் !
கணவன் கையில் தன்னை
கரையக் கொடுத்தவள் !
காதலென்றப் பெயருக்காய்
காமம் தீர்த்தவள் !
புதிதின் உறவுக் கூட்டிற்குள்ளே
புகுந்து கொண்டவள் !
புதுமை யேதும் செய்யவே
மறந்து நின்றவள் !
நேசம் சுமக்க மட்டும் தான்
கற்றுக் கொண்டவள் !
இன்றும் கூட இவள் மட்டுமே
பெண் என்பவள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment