
இரவைப் பகலும்
பகலை இரவும்
விழுங்குதல் போல்
உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிக் கொள்கிறோம் !
புன் முறுவலில்
புதுக் கதைத் தொடங்கி
வன் முறையில் முடிப்பது
நமக்கும் வாடிக்கைதான் !
நடுவர் இல்லாத
வழக்காடு மன்றம்
நமக்கு மட்டும்தான்
சாத்தியம் !
கனவுகள் காண்பதும்
காணாமல் போவதும்
நடுத்தர வர்கத்தின்
சாபக் கேடுகள் !
ஆனாலும்
ஒற்றைப் புள்ளி யொன்று
இணைத்து வைத்தே சுற்றுகிறது !
வா !
யாராவது ஒருவர்
நம்மில்
யாரையாவது விழுங்குவோம் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment