
தேடுதல் ஒரு தவம்,
தேடியது
கிடைக்கும் வரை
தேடுவதை நிறுத்தாதே,
தேடியவுடன்
கிடைத்து விட்டால்
அது
தேடியதே கிடையாது,
தேடியது ஒன்றாகவும்,
கிடைப்பது வேறாகவும்
இருப்பதுவே
உண்மையான தேடல்,
கல்வியை தேடினால்
அறிவை பெற வேண்டும்,
அன்பைத் தேடினால்
உறவுகள் கிடைக்க வேண்டும்,
உழைப்பை தேடினால்
உயர்வுகள் வர வேண்டும்,
ஆனாலொன்று,
மரணத்தை மட்டும்
நீயாகவே தேடாதே...
ஜனனத்தை போலவே
மரணமும் ஒரு நாள்
தானாக வந்துவிடும்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment