
மெளனத்தைத் தின்று கொண்டிருந்த
வார்த்தைகளை வீசி எறிகிறேன்...,
அவைகள், உருண்டுத் திரண்டு
பந்துகளாக மாறி
பந்துக்களை உதைத்துத் திரும்புகிறது ,
உறவுகளில் விரிசல் !
ஒட்டுவதற்குப் பசைத் தேடுகிறேன்..,
அதற்கான வார்த்தைகளை
யாராவது இரவல் கொடுங்கள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment