
இறை வணக்க
நோன்புகளின் இறுதியில்...
பிறைப் பார்த்து
பிறந்து விட்டது பெரு நாள் !
தர்மத்தின் வீடுகளில்
அல்லாஹ்வின் சுகந்தம்!
புத்தம் புது ஆடைகளில்
பூத்திருக்கும் நறுமணங்கள் !
எங்குப் பார்த்தாலும்
பெரு நாளின் வாசனைகள் !
புத்தாடைப் பிள்ளைகளின்
கொத்தாடும்
கொள்ளைச் சிரிப்பில் !
அப்பத்தாக்களின்
அழகிய கிண்டல்களில் !
அண்ணன் களின்
பெரு நாள் காசுகளில்!
அப்பா மார்களின்
நன் மொழி வாழ்த்துதலில் !
கூடுதல் தக்பீரின்
பள்ளியின்
சிறப்புத் தொழுகைகளில்!
அல்லாஹூ அக்பரென்னும்
தக்பீரின்
குழுவான முழக்கங்களில் !
நண்பர்களின் அரவணைப்பில்
நல் பறிமாற்ற வாழ்த்துகளில் !
மிஸ்கின் களின்
பசியறுந்த சிரிப்புகளில் !
அம்மாக்களின்
அன்பு மிஞ்சும் முத்தங்களில் !
அத்தாக்களின் அழகியப்
பார்வைகளில் !
நண்பர்களின்
கூடுதல் விளையாட்டில் !
நன்பகல் விருந்தின்
பிரியாணிச் சோற்றின்
நறுமணச் சுவையில் !
அத்தனையும் வாசம்
பெரு நாளின் அழகிய நேசம்!
ஈத் முபாராக்!
- மு.முகமது பாட்சா
கவிதை 06.07.2016
No comments:
Post a Comment