
கண்சிமிட்டும் கண நேரத்தில்
காட்சிகள் இடம் பிறழ்ந்து
நிகழ்காலத்தைச் சாகடித்த எதிர்காலம்
நிகழ்க் காலமாய் மாறி
அடுத்தக் கண் சிமிட்டலில்
இறந்த காலத்திற்குள் நுழையும்
மாயைக்குள் மூச்சுக் காற்றைச் சுமந்து
எதிர்காலத்தின் விடயங்களை
எடுத்துச் சொல்லும் தேகச் சுமையாளிக்கு
ஆசைகள் சற்று அதிகம்தான்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment