
"நேத்து வரை
நல்லாதான் இருந்தார்!
திடிரென்று மாரடைப்பாம்!
போய்,சேர்ந்துட்டார்!"
"அடடா!அப்படியா?!
எப்ப,எடுக்கப் போறாங்க?"
"சேர்த்து வைச்ச சொத்து,
பத்துத் தலமுறைத் தேறும்!
பாவம் மனுசன்,
பட்டென்று போயிட்டார்!"
"என்னச் செய்யிறது,
எப்ப எடுக்கப் போறாங்க?"
"அதோ...ஆடி யில வர்ராரே
அவர்தான்,அவர் மகன்!
பார்த்து பார்த்து வளர்த்தாரு?
பார்க்காம போயிட்டாரு!"
"அதுக்கு,என்ன பன்றது?
பொணம் நாறிடப்போகுது,
எப்ப எடுக்கப் போறாங்க?"
"பதவியிலே யிருந்த போது
மதிக்க மாட்டான்!
கால்லே விழுந்தாலும்
கண்டுக்காம போயிடுவான்!"
"சீக்கிரம்,எடுக்கச் சொல்லுங்க
பொணம், நாறிப் போகும்!"
"ஆடம்பரமா வாழ்ந்த மனுசனை
அம்மணமாக்கி,
ஒத்தை துணியோடு
மொத்தமா சுருட்டிட்டாங்க!"
"எல்லாருக்கும் அப்படிதான்!
வேலை நிறைய இருக்கு,
விரசா வாங்க!"
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment