
அந்தப் பறவைக்கும்
எனக்குமான உரையாடலில்
யார் யாரோ வந்து போகிறார்கள்!
காலொடிந்து வீழ்ந்தக் கதையை
அழுகையோடு சொல்கிறது
அந்தப் பறவை !
நானும் என் துயரக் கதைகளை
அதனிடம் சொல்லி வைக்கிறேன் !
எங்களின் நட்பு
கால் குணமாகும் வரை நீடிக்கலாம் !
பறந்துச் சென்றபின் திரும்பி
வரலாம் ! வரமாலும் போகலாம் !
என் கதை அதனிடமும்
அதன் கதை என்னிடமும்
ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும்
பாரங்களை
கழற்றி வைத்த நிம்மதியோடு !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment