
அந்துகத்தி லடங்கி நிற்கும்
பெருங்களிறுச் சங்கிலியே பலமென
ஞாபகத்திற் கொணர்ந்து மாவுத்தன்
அங்குசத்தின் கட்டுப்பாட்டில்
காலாட்டியே நின்று மொய்க்கும்,
ஈ யிற்க்கும் கொசுவிற்கும் காதுமுறமாட்டி
விரட்டி வேடிக்கைக்காய் நின்று நகர்ந்து
மாவுத்தன் கூவளிக்கும் தலையாட்டி
பிள்ளைகளைத் தன் னபரத்திலேற்றி
கைந் நாகத்தி லாசிகள் வழங்கி
அங்குலியில் தட்சனைகள் வாங்கி
கொடுத்து ,கூனிக் குறுகி நுடங்கி,
பசித்திடும் ஒவ்வொரு வேளைக்கும்
நெய்ம்மிதிக்கவளம் எதிர்பார்த்தே
நிற்கும் அவ்வேளையிலும் பிடியின்
நினைவுப் பிடித்தாட் கொண்டால்
சிந்தனைக ளொருமித்து நிறுத்தி
தன் பலமறிந்து அந்துகத்தை
அறுத்தெறிந்துப் பாகனைத்
தூக்கி மிதித்துக் கர்வமமாய்த் தலை
நிமிர்ந்து நடக்கும் உண்மையும் ஒரு நாள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment