Friday, 23 June 2017

துரத்தும் காதலி

No automatic alt text available.

அவள், என் காதலியாம்...
அவளேச் சொல்லிக் கொண்டாள்,
"ஆசைகளின் விளைச்சல் நான்.
உன்னைக் 
கழற்றிவிடுவேன்" என்றேன்
"உன்னால் முடியாது!;நான்,
இறுதி வரை
உன்னோடுவே யிருப்பேன்"என்றாள்,
"நான்,கர்வம் கொண்டவன்,
என் கர்வத்தால்;நீ
அழிவாய் என்றேன்"
உன் கர்வத்தை,நான்
நிச்சயம் அழிப்பேன்" என்றாள்
"அழகியாகவும் தெரிகிறாய்,
அரக்கியாகவும் தெரிகிறாயே...
நீ யார்" என்றேன்
அவள் சிரித்துவிட்டு
"நான் தான் உண்மையான
உன் மரணம்"என்றாள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts