வானில் பிறை தெரிந்தது
விடைபெறும் மாதத்திற்கு
ஒரு மகிழ்வான
தருணத்தைப் பரிசளிக்கிறோம்,
நேசிப்பை சுவாசித்துக் கொண்டோம்,
தர்மத்தின் பக்கம் நீளும் கைகளுக்கு
விலங்கினை உடைத்தோம்,
பசியுணர்ந்தோம்,
ஏழைகளுக்குப் பரிசளித்தோம்,
வெளிச்சப் புள்ளிகளில் உட்கார்ந்து கொண்டு
வாழ்த்துகள் கூறுகிறோம்
வாழ்த்துகளை வாங்கிக் கொள்கிறோம்,
எங்கும் ஒலிக்கிறது 'ஈத் முபாரக்"
மகிழ்வின் வேளையில் நறுமணம் கமழ்கிறது,
ஆனாலும் ஒரு கரும் புள்ளி
நகர்ந்து நகர்ந்து எங்களை இம்சிக்கிறது..
எங்களின் உணவுதட்டுகளைப் பறிக்கிறது,
எங்களின் சோதரர்களின் உதிரங்களை
பசுப் பாதுகாப்பென்று குடிக்கிறது...
அமைதியைத் தழுவி கொள்கிறோம்...
இயலாமையல்ல
எங்களுக்கான குரலாய் ஒலிக்கும்
நட்புகளின் மாண்புமிகும் நேசத்திற்காக...
நட்புகளே வாழ்த்துகள்
தர்மம் என்றும் தழைக்கட்டும்...
அதர்மத்திற்குத் தலைகுனிவு
வெகு விரைவில் கிடைக்கட்டும்...
மகிழ்வுடனே 'இனிய ஈகை திரு நாள்
நல்வாழ்த்துகள்'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment