0 விதைகளில்;யார்
உழவனின் உயிரை வைத்தது?
0 கைகேயின் வரத்தில்
சகினியின் தாயம் ஒளிந்திருந்தது!
சகுனியின் உருட்டளில்
கூனியின் தந்திரம் மறைந்திருந்தது!
0 அரசியல் பேசும் ஆலயங்களில்
கடவுள் இருப்பதில்லை!
0 தூக்கணாம்
குருவிகளுக் கெல்லாம்
வீடு இருக்கிறது!
நமக்கும் ஒரு வீடு வேண்டாமா?
0 காக்கைகள்தான்,மனிதனுக்கு
சவத்தை அடக்கக்
கற்றுக் கொடுத்ததாம்!
நிச்சயம் மனிதர்கள்தான்,
காக்கைகளுக்கு; திருடக்
கற்றுக் கொடுத்திருப்பார்கள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment