Wednesday, 28 June 2017

நகராத வனம்


Image result for model forest painting

பாலித்தீன் தாவர 
இலை நுனிகளின் மேல் 
பாலியோவின் 
நெகிழாப் பனித் துளிகள், 
கரையாத காகங்கள், 
நகராத நரிகள், 
மாடல் வனத்திலும் 
மகிழ்வுறா விலங்குகள், 
பைபர் கொடிகளில் 
தாவாத குரங்குகள், 
அசையாத வனத்திலும் 
கொய்யாத கனிகள், 
ஓடாத நதியில்
பாடாத தவளைகள்,
அழகாய் ஒரு போதி மரம், 
அமைதியான புத்தர்... 
காலம் 
நகராமல் நின்றிருந்தது 
காட்சிமைப் பொருளாய், 
நாளை என்பதுஉம் 
இப்படியே 
நகராமல் போகலாம், 
காட்சிகளின் பொருளாய் 
நாமும் அசையாமலிருக்க. 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts