கதைச் சொல்லிகள்
காத்துக் கிடக்கிறார்கள்
முதியோர் இல்லத்தில்!
000
சோதிடக்காரன் மகள்
சாபம் விடுகிறாள்
செவ்வாய் தோசம்!
000
சில்லறைக் காசுகளை
எண்ணிப்பார்க்கிறாள்
வட்டமுகப் பொட்டுக்காரி
நிலா!
000
சில்லரைக் காசுகளை
எண்ணியப்பிறகுதான்
நம்பிக்கை வந்தது பூசாரிக்கு,
கடவுள் இருக்கிறார்!
000
யாரிந்த ஓட்டைக் கல்லில்
தோசை வார்த்தது...
வட்ட நிலா!
000
அவளைத் தொட்டுப் பார்த்து
கீழே விழுந்தது;
ஏமாற்றத்துடன்..மழைத் துளி!
000
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment