
நான் உன்னுடன் இருக்கிறேன்
நீ யாருடன் இருக்கிறாய்'
நாடோடியின் பாடலொன்று
கடந்து போகின்றது...
காதலின் மொழி
காற்றில் கலந்து கிடக்கிறது,
சன்னலைக் கடந்து போகும்
பார்வையெல்லாம்
காதலே இல்லையென்று
விதவையின் பாடலொன்று
விசும்பலில் ஒலிக்கிறது
மேய்ப்பனின் புல்லாங்குழலில்
யாரை அழைக்கிறது அந்த இசை,
திருடிய வார்த்தைகளை
திருப்பித் தருவதிலும் ஒரு சுகம்,
காதலரின் பார்வைகளுக்குள்
பதுங்கிக் கிடக்கிறது
காதலின் கவிதைகள்,
துருவிய வார்த்தைகளாய்
தூவிடும் மழைச் சாரலாய்
எங்கும் காதல், எதிலும் காதல்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment