
இதழ் பிரிக்காத இரவொன்றில்
நடந்து செல்கிறோம்...
நிலவும் நட்சத்திரங்களும்
எங்களையே
பார்த்துக் கொண்டிருக்கின்றன,
லைலா இறந்துவிட்டாளென்று
சொல்கிறவர்கள் பைத்திய காரர்கள்...
காயிஸாகிய நான் கவிதைகளில்
அவளுக்காக உயிர் கொடுத்திருக்கிறேன்,
அவள் எப்படி இறப்பாள் ?
என் இறந்த உடலைப் பார்த்து
இனி யாரும் அழப் போவதில்லை...
எனக்காக அழக் கூடியவள்தான்
இப்போதும்
என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறாள்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment