பறவைகளுக்கு
தவம் செய்யத் தெரியாது!
அவைகளுக்கு
துறவுகளும் கிடையாது!
இரைத் தேடும்
பணியில்தான் இறைவனைத்
தேடிக் கொள்ளும்!
இனவிருக்திக் செய்வதுவும்
இனத்தோடு வாழ்வதுவும்
தவமாக்கி வாழக் கூடும்!
நன்றி மறப்பதுவும்
நன்றன்று யென்றதுவும்
நன்றாகவே தெரியும்!
முனிவர்களின் தவக் கூட்டை
சுற்றிவரும் புறாக்களும்
பக்குவமாய்
இதைத்தான் சொல்லும்!
புரிந்து கொள்ளும் சக்தியில்லை...
பின்
யாருக்குதான் இந்தத் தவம்?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment