எழுதாதக் கவிதைக்கும்
இலக்கணங்கள் இருக்கிறதாம்,
எழுதாதக் காகிதமும்
எழுத்தைத் தராதத் தூவலும்
அதற்கு நிச்சயம் வேண்டும்,
விழிக்காத மூளையை
கசங்காமல் உறங்கவைத்து ,
பொத்தகங்களைப் புரட்டாமல்,
பொதுக் கோபம் கொள்ளாமல்,
எது நடந்தால் நமக்கென்ன என்ற
ஞானிகளின் இருமாந்த இருப்பு
திண்ணமாய் வேண்டும்!
முக்கியமாய் அடிக் குறிப்பிட்டு
பெயரோ தேதியோ எழுதவே கூடாது,
ஒருவேளை அதுவும் கவிதையாகலாம்,
குறிப்பாகத் தாள்களை
கசக்கி விடாதீர்கள்,
அஃது உங்களை யொரு ஓவியராகவும்
மாற்றிவிடக் கூடும் .
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment