முத்தையாவிற்கு
முகவரிகள் தேவையில்லை,
கண்ணதாசனாய்
கவிதைகளில் வாழ்கிறான்,
சொல்லாட்சிகளின்
செல்லப் பிள்ளையவன்,
பாமரன்களை
பாட்டுக்குச் சொந்தமாக்கியவன்,
பட்டினத்தாரையும்
ரசம் மாற்றிக் கொடுப்பான்,
கொக்கோகத்தையும்
குளிர்வித்து தருவான்!
யதார்த்தத்தை
இறைத்துவிட்டுப் போகும் எளியவன்,
அவனுக்கு அந்தரங்கமும்
அரங்கமும் ஒன்றுதான்,
சாவிற்கும் சாபமிட்டுப் பாட
அவனுக்குத் தெரிந்திருந்தது,
அவன் பிறந்தது இன்று அல்ல
1927...
அவன் இறந்தது தெரியவில்லை,
கவிதைகளில்தான்
அவன் இன்னமும் வாழ்கிறான்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment