
உன் வார்த்தைகளை
போர்வை போர்த்தித்
தூங்க வைத்துவிட்டு
என் வார்த்தைகளை மட்டும்
தோரணம் கட்டி
தொங்க விட்டிருக்கிறாய்,
மனதைச் சிதைத்த வார்த்தைகளை
உடனே அவிழ்த்துவிடு,
வார்த்தைகளை
கூர்மைத் தீட்டி வைத்திருக்கிறேன்,
மௌனம் குலைத்த வார்த்தைகளை
மௌனமாக
எப்படிக் கடந்து போவது ?
என் மொழியின் மௌனம்
உன் மொழியின் ஆதிக்கமென
நினைத்துவிட்டாய்,
சுழன்றடிக்கும்
சூறாவளிக்கு முன்பாக
ஒத்திகைப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
என் வார்த்தைகள்,
முடிந்தால் காப்பாற்றிக் கொள்
உன் வார்த்தைகளை...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment