Tuesday, 27 June 2017

நான் யார்?

Related image

வாசலைத் திறந்து வையுங்கள் 
காற்று அப்போதுதான் உள்ளே நுழையும், 
கண்ணாடியின் முன் நின்று 
புன்னகையை 
உங்களுக்குப் பரிசளித்தீர்களா? 
நீங்களே உங்களை நேசிக்காத போது 
மற்றவர் யார் உங்களை வாசிப்பார்கள் ? 
உலகமொரு நாடக மேடைதான் 
நடிப்பவர்கள் இங்கு அதிகம்... 
நாம் மட்டும் யார்? ஒரு கதாப்பாத்திரம்தான், 
அதை வடிவமைக்கும் உரிமை 
நமக்கு மட்டுமே இருக்கிறது..., 
கதவுகளைப் பூட்டிக் கொண்டு 
உட்கார்ந்திருக்கும் பொம்மையின் பெயர் 
எப்போதுமே பொம்மைதான், 
அவன் சரியில்லை,இவன் சரியில்லை... 
நாமும் சரியில்லைதான். 
கை குலுக்கவும் 
கட்டியணைக்கவும் தெரியாதவனிடம் 
உறவுகள் மட்டும் 
எப்படி ஒட்டிக் கொண்டே தொடரும்? 
நிலை வாசற்படி இடிக்கிறதே என்றால் 
குனிந்துதான் போகவேண்டும், 
கைகளை விரித்துச் சுவாசிக்கத் தெரியாதவன் 
எப்போதுமே சுயம் பேசி 
அழுக்குகளைச் சுமந்து கொண்டே திரிகிறான் 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts