அம்மாக்களால்
அழ மட்டுமே முடியும்...
அப்பாக்கள்
என்றுமே அழுவதில்லை,
அப்பாக்களில் மட்டுமே
அப்பாக்களாகவும்
ஒரு சிலர்
அப்பால்' களாகவும் இருக்கிறார்கள்,
அப்பாத்தைகளை நேசிக்கும்
அப்பாக்களின் வீட்டில்தான்
பெண் பிள்ளைகளெல்லாம்
ராணிகளாக உலாவருகிறார்கள்,
அப்பாக்களின் ஆழ்மனதை
அம்மாக்களும் அறிய முடிவதில்லை,
அப்பாக்களின் பிரிவில்தான் தெரிகிறது
அன்றாடத் தேவைகளும்
குடும்பத்தின் மாபெரும் சுமைகளும்!
(அப்பாத்தை = தமக்கை)
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment