நிட்காரமாய்ப் பார்க்கும்
கட்புலம் தப்பி நகர் விட்டோடி
பாலைச் சென்றடைந்து
அகடூரி விரட்டித் தாக்க
காடியடுப்பில் விழுந்து வெந்து
சலதாரையே சுகமென
புரண்டுத் தெளிவில்
செத்துமடியும் கர்வ விளிம்பில்
புழுக்களின் கூட்டில்
செத்தப் பிணமாய்த் தெளியும் ஞானம்!
-------------------------------------------------
நிட்காரமாய் - நிந்தனையாய்
கட்புலம் - கண் பார்வை
அகடூரி - பாம்பு
சலதாரை - கழிவு நீர்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment