Wednesday, 21 June 2017

தெளியும் ஞானம்


Image result for கண்ணீர்

நிட்காரமாய்ப் பார்க்கும் 
கட்புலம் தப்பி நகர் விட்டோடி 
பாலைச் சென்றடைந்து 
அகடூரி விரட்டித் தாக்க 
காடியடுப்பில் விழுந்து வெந்து 
சலதாரையே சுகமென 
புரண்டுத் தெளிவில் 
செத்துமடியும் கர்வ விளிம்பில் 
புழுக்களின் கூட்டில் 
செத்தப் பிணமாய்த் தெளியும் ஞானம்!
-------------------------------------------------
நிட்காரமாய் - நிந்தனையாய்
கட்புலம்     - கண் பார்வை
அகடூரி      - பாம்பு
சலதாரை    - கழிவு நீர்

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts