Friday, 30 June 2017

அவள்-அவன்-கவிதை

Image may contain: one or more people

'அவன்' என்றெழுதி 
கவிதையைத் தொடங்கி வைத்தேன்... 
அதில் வந்து 'அவள்' 
அமர்ந்துக் கொள்கிறாள் ! 
காதல் வார்த்தைகளில் 
கவிதை மெல்ல நகர்கிறது... 
நிலாவும் பறவைகளும் 
தேவையில்லாமல் 
வந்து போகின்றன ! 
தேங்கும் குளத்தில் 
சிறு கல்லொன்று விழ... 
ராட்சசப் பறவை யொன்று 
அவளைத் தூக்கிச் செல்கிறது ... 
அவள் உறவுகளாக இருக்குமென 
ஒருவன் சொல்லுகின்றான் ! 
சாதியத்தின் விழுமியம் 
உருமாறி வந்திருப்பதாய் 
மற்றவன் வந்து 
சேர்ந்து கொள்கிறான் ! 
நாங்கள் மூவருமாய் 
அவளைத் தேடிப் போகிறோம்... 
பொது ஜன வெளியி லவள் 
இரத்த வெள்ளத்தில் 
மிதந்துக் கிடக்கிறாள்... 
கவிதையைக் 
காற்றில் பறக்க விடுகிறேன் 
அவள் மேல் வந்து ஒட்டிக் கொண்டு 
வெளி வர மறுக்கிறது ! 
இரத்தக் கறையுடன் 
கனவுகளைத் தொலைத்து 
அவளும் என் கவிதையும் அந்த அவனும்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts