Wednesday, 28 June 2017

சின்ன சின்னதாய்

Image result for flex men painting

கவிதையென்று 
சொன்னாலும் சொல்லுங்கள்... 
கதையென்று 
சொன்னாலும் சொல்லுங்கள்... 
மூச்சிருக்கும் வரைதான் 
முகவரிகள்! 

        000

சாகும் போது,ஒருவன்
"சங்கரா!சங்கரா!" என்றான்
சங்கரன் கேட்டான்,
"உனக்கு என்ன 
வரம் வேண்டும் கேள்?"
"சந்தானத்திடம்
கொடுத்த கடனை
திருப்பி வாங்கியப் பிறகு;
சச்சிதானந்தத்திடம்
வாங்கிய கடனைக்
திருப்பி  கொடுக்கும் முன்பாக
என் உயிரைப் பறித்துவிடு!

              000

கூர்மையான ஆயுதம்
குத்துபட்டது இதயம்
வலிக்கிறது வார்த்தை..

                 000

சாக்கரட்டீஸின் கையில்
விஷம் நிறைந்த கோப்பை
சுற்றிலும் கற்கால மனிதர்கள்..

                   000

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts