
கவிதையென்று
சொன்னாலும் சொல்லுங்கள்...
கதையென்று
சொன்னாலும் சொல்லுங்கள்...
மூச்சிருக்கும் வரைதான்
முகவரிகள்!
000
சாகும் போது,ஒருவன்
"சங்கரா!சங்கரா!" என்றான்
சங்கரன் கேட்டான்,
"உனக்கு என்ன
வரம் வேண்டும் கேள்?"
"சந்தானத்திடம்
கொடுத்த கடனை
திருப்பி வாங்கியப் பிறகு;
சச்சிதானந்தத்திடம்
வாங்கிய கடனைக்
திருப்பி கொடுக்கும் முன்பாக
என் உயிரைப் பறித்துவிடு!
000
கூர்மையான ஆயுதம்
குத்துபட்டது இதயம்
வலிக்கிறது வார்த்தை..
000
சாக்கரட்டீஸின் கையில்
விஷம் நிறைந்த கோப்பை
சுற்றிலும் கற்கால மனிதர்கள்..
000
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment