பாரதியின் கோபத்தை
சிறை வைத்துவிட்டு
புறப்பட்டான் புதுக்கவிஞன்!
அரசியலை விமர்சிக்க
அருகதையில்லா......
அநாதையாகிப் போனான்!
ஆதாயம் இருக்குமாவென
அதிலும் வழித் தேடுகிறான்!
காதலை மட்டுமே
எழுதிவிட்டு
நானும் கவிஞனென்றால்;
மதுவின்
மயக்கத்தில் வீழ்ந்த
அடிமைதானே... நீயும் ?
இனியாவது
கவிதைகளுக்கு
புது இரத்தம் பாய்ச்சுங்கள்;
சீரழியும் நாடாவது
உம்மை
சீர் தூக்கிப் பார்க்கட்டும்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment