Thursday, 29 June 2017

மறந்து போன சுவாதி

No automatic alt text available.

வெட்டி வீழ்ந்துக் கிடக்கிறாள் ஒருத்தி,
தென் நாட்டில் இறந்ததால் 
அவளின் பெயர் சுவாதிதான், 
சுற்றி நகர்ந்தப் பயணிகள் மட்டும் 
வட நாட்டுக் காரர்களாக 
மாறிப் போனார்கள்! 
இரக்கமென்பது வரலாமா? வரக்கூடாதா? 
என்ற கேள்விக் குறிகளோடு 
ஒரு சில கண்ணீர்த் துளிகளும் 
பிணத்தி னருகில்! 
அவளின் அகோர மரணத்தின் மீது 
நம் கண்ணீர்த் துளிகளும் கலந்திருக்க 
நியாயமில்லைதான் ! 
கருணைக் கூட இல்லாமல் நகர்ந்தது, 
காவல் துறையும் ஆய்வுதான் செய்தது,
சிலரை வச்சியும் செய்தது... 
சாதி கடந்த வெறியின் உச்சியில் 
வெட்டிப் போட்டவன் சுற்றி நின்றே 
வேடிக்கையும் பார்த்திருக்கலாம்,
காவல் துறையிடம்
கை குலுக்கியும் பேசியிருக்கலாம், 
பூணூல் போட்ட  கூட்டம் மட்டும் 
தொப்பிப் போட்டவனாய் தேடிப் பார்த்தது, 
கழுகுகள் 
அங்கே இல்லையென்று யார் சொன்னது? 
அரசியல் செய்ய தேவை படுகிறது 
படுகொலைகளில் வீழ்ந்தப் பிணங்கள்,
செத்தபிணத்தை 
சுட்டுத் திண்ண ஏன் இத்தனை ஆவல் ?
இங்கே நிர்பயாக்கள் இறப்பதில்லை 
நீதிக் கிடைப்பதற்கு,

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts