Wednesday, 14 June 2017

கண்ணில்லாத காதல்

Image result for laila majnu painting

ஒட்டகத்தின் பாதையில் 
நடந்து போகிறேன், 
சுற்றிலும் மணற் காற்று 
வீசிக் கொண்டிருக்கிறது, 
புற்களாய் முளைத்த 
கொத்து முட்கள் 
கால்களைத் தைக்கின்றன, 
உதிரத்தின் பாதைகளை 
உனக்காக விட்டு வைத்திருக்கிறேன், 
உன் குரல் 
என்னை விட்டுப் போக மறுக்கிறது... 
என் குரல் உனக்குக் கேட்கிறதா ? 
பிரியமே உனக்கு ஒன்று தெரியுமா ? 
முல்லாவின் முசல்லாவை 
மிதித்துவிட்டேனாம், 
கத்துகிறான்...என்னையே 
மஜ்னூ என்று திட்டுகிறான், 
உன் காதல்தான் 
என் கண்களைக் கட்டி விட்டதே ! 
அஃது அந்தப் பைத்தியத்திற்கு 
எப்படித் தெரியும்? 
அல்லாவை காதலிப்பதாய்ச் சொல்லுகிறான், 
அவனுக்கு மட்டும் ஏன், 
கண்களைக் காதல் கட்டவில்லை ? 
லைலா ! அவன் குறையுள்ளவன் ! 
அல்லாஹ் அவனை மன்னிக்கட்டும்... 
நீ எனக்காவே காத்திரு ! 
நான் எப்படியும் 
உன்னை நிச்சயம் அடைந்துவிடுவேன்... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts