
கசக்கிப் போட்டத் தாள்களில்
கவிதை வரவில்லையாம்...
கசங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்!
உடைத்துப் போட்ட வார்த்தைகளிலும்
உருப்படியாக ஒன்றுமில்லை!
புரியாத வார்த்தைகளை
புட்டுப் புட்டு வைத்தான்
புரியும் படி அங்கில்லை!
ஆனாலும்
அனுப்பி வைத்தான்
போட்டி அறிவித்த மாத இதழிற்கு...
ஆச்சரியம்
அவனுக்குதான் முதல் பரிசாம்!
விளங்காத வித்தியார்த்தி யொன்று
விளங்காமலேயே நடுவராய் அங்கு!
விளங்கிடும் மாத இலக்கிய இதழ்!
நாளைக்கு அவனும் ஒர் அறிவு ஜீவி!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment