Sunday, 28 May 2017

ஞாயமா?

கண்ணகி க்கான பட முடிவு

நெகிழ மெடுத்து வீசிய 
கண்ணகியின் சொற் பரலில் 
பரமின்றித் தவித்த கோவன் 
கோவலனின் பிறவிழைச் சுமந்தே 
மறித்தல் ஞாயமெனில்... 
மாதவியின் மாதவிப்பை எளிதில்கடந்து 
நியாயம் சுவைத்த பத்தினியாள் 
மதுரையை எரித்ததும் பாவமன்றோ? 
கொற்றவனைக் கூற்றுவன் பறித்த நொடி 
பட்டெனப்போன பட்டமகிஷியின் 
அன்பில் துளியாமோ 
கண்ணகியின் கனல் நெருப்பு ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts