
கப்பலொன்று கரை தட்டிவிட்டதாக
போவோர்கள் சொன்னார்கள்,
கடலில்லாத ஊரில்
ஆவலோடு கப்பலைத் தேடுகின்றேன்...
அலையடிக்காத பக்கமாக
பார்க்கச் சொன்னார்கள்,
ஒட்டகம் மேய்ப்பவன் சொன்னான்
இப்போதுதான் ஆடுகளைவைத்து
சிலர் இழுத்துச் சென்றதாக
புரியவில்லைத்தானே !
எனக்கும்தான் புரியவில்லை...
நானில்லாத ஊரில் என்னிடமே
இப்படித்தான் சிலர் எப்போதும்
சொல்லிக் கொண்டுத் திரிகிறார்கள்.
- முகமது பாட்சா
No comments:
Post a Comment