Thursday, 25 May 2017

இவர்கள் இப்படித்தான்

confused man painting க்கான பட முடிவு

கப்பலொன்று கரை தட்டிவிட்டதாக
போவோர்கள் சொன்னார்கள்,
கடலில்லாத ஊரில் 
ஆவலோடு கப்பலைத் தேடுகின்றேன்...
அலையடிக்காத பக்கமாக 
பார்க்கச் சொன்னார்கள்,
ஒட்டகம் மேய்ப்பவன் சொன்னான்
இப்போதுதான் ஆடுகளைவைத்து 
சிலர் இழுத்துச் சென்றதாக
புரியவில்லைத்தானே !
எனக்கும்தான் புரியவில்லை...
நானில்லாத ஊரில் என்னிடமே
இப்படித்தான் சிலர் எப்போதும்
சொல்லிக் கொண்டுத் திரிகிறார்கள்.

- முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts