உறங்காத விழிகளுக்குள்
நுழைந்தவள்
அடர்ந்த இருட்டை
முகத்தில் போர்த்துகிறாள்
விடத்தை இதழில் செலுத்தி
கடத்திப் போனவள்
கிடத்திய இடம்
பாலையா , கடலாயென்று
தெரியாதோர் மாயை

ஒட்டகங்களெல்லாம்
கடலின் மீது நடக்க
மீன்களெல்லாம் பாலையின்
மணலில் நீந்துகின்றன
என் மீது
ஒரு பேரீட்சை மரம் அமர்ந்திருக்க
நான் வேராய் மாறி
நீரை அருந்துகிறேன்
அவள் என்னையும் பருகி
தாகம் தவிக்கிறாள்
வெட்பம் நிழலைத் தேட
நானும் அவளும் தனியாகக் கிடக்கிறோம்
தாகம் தீர்க்கவியலாத கடல்
பாலை முழுவதும் பரவி விரவியும்
ஒட்டகங்கள்
கடலின் மீது நடந்து போகின்றன.
- மு.முகமது பாட்சா
நுழைந்தவள்
அடர்ந்த இருட்டை
முகத்தில் போர்த்துகிறாள்
விடத்தை இதழில் செலுத்தி
கடத்திப் போனவள்
கிடத்திய இடம்
பாலையா , கடலாயென்று
தெரியாதோர் மாயை
ஒட்டகங்களெல்லாம்
கடலின் மீது நடக்க
மீன்களெல்லாம் பாலையின்
மணலில் நீந்துகின்றன
என் மீது
ஒரு பேரீட்சை மரம் அமர்ந்திருக்க
நான் வேராய் மாறி
நீரை அருந்துகிறேன்
அவள் என்னையும் பருகி
தாகம் தவிக்கிறாள்
வெட்பம் நிழலைத் தேட
நானும் அவளும் தனியாகக் கிடக்கிறோம்
தாகம் தீர்க்கவியலாத கடல்
பாலை முழுவதும் பரவி விரவியும்
ஒட்டகங்கள்
கடலின் மீது நடந்து போகின்றன.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment