
பாப்பா
பள்ளிக்கு கிளம்பி விட்டாள்!
புது ஆடை உடுத்தியிருந்தாள்!
புதுப்பை,பலகை,பல்பம்
அவளுக்கு
சந்தோஷத்தை தந்தது!
"அம்மா...ஸ்கூலூக்கு போறேன்"
மழலை மாறாத
பாப்பாவின் வார்த்தைகள்
சக்கரை கட்டிகள்!
"நானும் ஸ்கூலூக்கு போறேன்!"
"நானும் ஸ்கூலூக்கு போறேன்!"
என்ற கர்வம்
அவளின் கண்களில்!
பள்ளிப் போன பிறகு
அவளின் சந்தோஷம்
ஓடிப்போனது!
கொட்டடி சிறைக்குள்
பாப்பாக்கள்!
அடிப்பதற்கே
அவதாரம் எடுத்தது போல்
ஆசிரியர்,ஆசிரியைகள்!
மறு நாள்
பாப்பா சொன்னாள்,
"அம்...மா!...எனக்கு
வயித்தை வலிக்குது!"
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment