Thursday, 18 May 2017

தொலைந்து போனோம்



தொலையும் முன்பே
எமக்குத் தெரிந்திருந்தது
தொலைந்து போவோமென்று...
ஈட்டிகளை
நீங்களே தீட்டிக் கொடுத்தபோது!

முள்ளிவாய்க்கால் க்கான பட முடிவு

இன்னமும்; நாங்கள்
எங்களைத்தான்
தேடிக் கொண்டேயிருக்கிறோம்!

பார்த்தீர்களா?
எங்கள் தேசத்து புத்தரின் வாயில்...
கோரைப் பற்களுக்கு பதிலாக
சிங்கப்பற்கள் முளைத்திருப்பதை !

கொல்லுதல் பாவமென்றுதான்
புத்தனின் சித்தனானான்
கலிங்கத்தின் அசோகன்!

கொலைகளும் நியாயமென்றே
தன்னை மாற்றிக் கொண்டான்
இலங்கையின் புத்தன்!

எங்கள் தேசமே..
வரலாற்றுக் குறிப்பிலாவது
எங்களை மிச்சம் வையுங்கள்..

இலங்கை மண்ணில்
அழிந்ததொரு இனமென்று
துரோகத்தின் வரலாற்றில்
அழியாமல் எழுதியிருக்கட்டும் .

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts