கதவுகளை
அறைந்து சாத்திவிடுங்கள்
கண்களைக் கூசுகின்றது,
புத்தகமாய்த் திறந்து கிடக்கிறேன்
வாசிப்பைத் தொடங்கலாம்,
புத்தகங்கள்
எப்போதும் யாரையும் வாசிப்பதில்லை
மௌனத்தைத் தின்ற வயல் நான்
சலசலப்பு
மேயும் ஆடுகளிடம் மட்டும்தான்,

கனவுகளையும்
ஆடைகளோடு கழற்றி வைத்துவிட்டேன்
கவிதையெழுதுபவர்கள்
என் தேகத்திலெழுதிக் கொள்ளலாம்,
இரவுகளை
எனக்குப் பகலாக்கி விடாதீர்கள்...
இரவுகள் இரவுகளாகவே இருக்கட்டும்.
பகலில் நான்
எப்போதுமே விழித்திருப்பதில்லை.
முடியாத இந்தக் கவிதையை
யாரும் முடித்து வைக்க வேண்டாம்,
பாழும் வயிறு பசிக்கத்தான் செய்கிறது !
- முகமதுபாட்சா
அறைந்து சாத்திவிடுங்கள்
கண்களைக் கூசுகின்றது,
புத்தகமாய்த் திறந்து கிடக்கிறேன்
வாசிப்பைத் தொடங்கலாம்,
புத்தகங்கள்
எப்போதும் யாரையும் வாசிப்பதில்லை
மௌனத்தைத் தின்ற வயல் நான்
சலசலப்பு
மேயும் ஆடுகளிடம் மட்டும்தான்,

கனவுகளையும்
ஆடைகளோடு கழற்றி வைத்துவிட்டேன்
கவிதையெழுதுபவர்கள்
என் தேகத்திலெழுதிக் கொள்ளலாம்,
இரவுகளை
எனக்குப் பகலாக்கி விடாதீர்கள்...
இரவுகள் இரவுகளாகவே இருக்கட்டும்.
பகலில் நான்
எப்போதுமே விழித்திருப்பதில்லை.
முடியாத இந்தக் கவிதையை
யாரும் முடித்து வைக்க வேண்டாம்,
பாழும் வயிறு பசிக்கத்தான் செய்கிறது !
- முகமதுபாட்சா
No comments:
Post a Comment